திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது

திருப்பதி,

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ, ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 51 செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.