இலங்கை கடற்படையினர் அனுராதபுரம் உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து (14) மெதவச்சிய வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட பதினோராயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (11,377) Pregabalin Capsules 150 mg வகையின் மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கடற்படையினர் அனுராதபுரம் உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து (14) மெதவச்சிய வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மருந்து விற்பனை நிலையமொன்று சோதனை செய்யப்பட்டது. அங்கு குறித்த மருந்து விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட பதினோராயிரத்து முந்நூற்று எழுபத்தி ஏழு (11377) Pregabalin Capsules 150 mg மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 40 வயதுடைய மெதவச்சிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் (01) மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள பதினோராயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (11377) Pregabalin Capsules 150 mg மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுராதபுரம் உணவு மற்றும் மருந்துப் பரிசோதனைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.