இனி கோர்ட் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்; நடிகை ஜாக்குலினுக்கு கோர்ட் அனுமதி!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பணமோசடி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டிப் பணம் பறித்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருந்ததால், ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப் பிரிவு மற்றும் டெல்லி போலீஸார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, ஜாக்குலின் வெளிநாட்டுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

சுகேஷ் – ஜாக்குலின்

இதனால் அவரால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அதன் பிறகு கோர்ட் ஒப்புதலோடு வெளிநாட்டுக்குச் சென்று வந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த வாரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். “ஒவ்வோர் ஆண்டும் உனது பிறந்தநாள் எனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தினம் பேபி” என்று பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், “பேபி, நீ தினம் தினம் இளமையாகிக்கொண்டிருக்கிறாய்… உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இனி கோர்ட் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்றும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு கோர்ட் மற்றும் அமலாக்கப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தால்போதும் என்றும் கோர்ட் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டிருக்கிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதற்கு முன்பு வெளிநாடுகளுக்குச் சென்றபோது ஜாமீன் நிபந்தனைகளை மீறியது கிடையாது என்றும், அவர் ஒழுங்காக வருமான வரி கட்டுவதாகவும், தொழில் விஷயமாக அடிக்கடி அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதை கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும் நீதிபதி சைலேந்திர மாலிக் தெரிவித்திருக்கிறார். ஜாக்குலின் தனது மனுவில் ஒவ்வொரு முறையும் கோர்டில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இதனால் அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.