அதிமுக மாநாடு… ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபியிடம் பரபரப்பு புகார்!

அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு மதுரை வளையங்குளத்தில் நாளை எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் பார்வையில் மாநாட்டிற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வசதிக்காக அதிமுக சார்பில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 1100 தொண்டர்கள் மதுரை சென்றுள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி, பாடகி ராஜலட்சுமி மற்றும் செந்திலின் இசை நிகழ்ச்சி, மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சி, பட்டி மன்றம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதிமுக எழுச்சி மாநாடு ஜோதி – வழி அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள்

மாநாட்டு திடலில் கொடியேறுறம் நிகழ்வின் போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு நாளை மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அதில் மாநாட்டிற்காக அனுமதியின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.