உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ரஜினிகாந்த்!

லக்னோ:
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகிய கையோடு, ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த சூழலில், இமயமலைக்கு சென்று தியானம் செய்து முடித்த ரஜினிகாந்தி, தமிழகம் திரும்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ நேற்று முன்தினம் நேராக ஜார்க்கண்ட் மாநிலம் சென்று அங்கு ஆளுநராக இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். பின்னர் அங்குள்ள பிரசித்தி பெற்ற தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

“குட்பை சீம்ஸ்”.. உலகையே மகிழ்வித்த சீம்ஸ் நாய் விடைபெற்றது.. சோகத்தில் மூழ்கிய சோஷியல் மீடியா!

இதன் தொடர்ச்சியாக, ரஜினிகாந்த் உத்தரபிரதேசத்துக்கு நேற்று சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்ககப் போவதாக ரஜினி தெரிவித்தார். ஆனால், யோகி அதை விரும்பாததால் துணை மதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ஜெயிலர் திரைப்படம் பார்த்தார். ஆனால், கேசவ் பிரசாத்தோ பாதியிலேயே திரையரங்கில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்திற்கு ரஜினி இன்று சென்றார். ரஜினியை வாசலில் வந்து வரவேற்ற யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிாந்தி விழுந்து ஆசி வாஙகினார். இதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. தன்னை விட 21 வருடங்கள் இளையவரான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததை அவரது ரசிகர்களே விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.