மக்களே உஷார்… 7 நாட்கள் மழை கொட்டித் தீர்க்கும்… வானிலை அலெர்ட்..

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகலில் கடும் வெயில் சுட்டெரிப்பதும் இரவில் இதமாக மழை பெய்வதுமாக இருக்கிறது. இதனால் வெயில் அடிக்குமா மழை பெய்யுமா என்று தெரியாத நிலையிலேயே மக்கள் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சின்கோனா மாவட்டங்களில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.