கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத 'புஷ்பா' பட நடிகை: வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனசுயா பரத்வாஜ். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்தவர். ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்நிலையில் அனசுயா பரத்வாஜ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமான முகமான அனசுயா, கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அனுசுயாவின் இந்த பதிவை ரசிகர்கள் பதறி போய்விட்டனர். எப்போதும் சிரித்த முகமாக போட்டோ போட்டு, எங்களை உற்சாகப்படுத்தும் அனசுயா இப்படி அழுகலாமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில், ‘சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிரான பதிவு மற்றும் கருத்துகளுக்காக நான் அழுகவில்லை. அதெல்லாம் காரணமும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்பு இல்லாத ஒன்று தான் இந்த அழுகைக்கு காரணம். என்னதான் சமூக வலைத்தள பதிவுகள் காரணமில்லை என்றும் கூறினாலும், எனக்கு அதன்மீது கோபமும் உள்ளது.

ஆனால் அழுகை அழகானது என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பியூட்டி பார்லர் சென்று அங்கு அழகாக மேக்கப் செய்து மகிழ்ச்சியாக இருக்கும் புதிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார் அனசுயா. இந்த வீடியோவை பார்த்து பிறகு தான் ரசிகர்கள் நிம்மதியானர்கள். எப்போதும் இதேபோல் சிரித்து கொண்டே இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லா இருக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்த வண்ணம் உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் சொன்ன ஒத்த வார்த்தை: கோபத்தின் உச்சிக்கே சென்ற ‘புஷ்பா’ பட நடிகை.!

அனசுயா அண்மையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘விமானம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் மிரட்டலான வில்லியாக நடித்திருந்தார் அனசுயா. இதனையடுத்து இரண்டாம் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

View this post on InstagramA post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ஒரு சாதாரணம் செம்மர கடத்தல்காரன் எவ்வாறு பவருக்கு வருகிறான் என காட்டப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் அவன் எப்படி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போகிறான் என்ற காட்சிகள் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Anasuya Bharadwaj: செருப்பால அடிப்பேன்: கோபத்தில் கொந்தளித்த ‘புஷ்பா’ பட நடிகை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.