சாமிக்கே விபூதி அடித்த நபர்… கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செக்… அக்கவுண்டில் ரூ.17.. ஷாக்கான அதிகாரிகள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூரில் இருந்தும் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்று அனைவரது கவனத்தையும் பெற்றது. அதிலும் அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த அமொவுண்டை பார்த்து அதிகாரிகள் விக்கி போய்விட்டனர். காரணம் அந்த காசோலையில் 100 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் கோவில் பெயரில் 100 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அமொவுண்ட் காணிக்கையாக செலுத்தப்பட்டது இல்லையாம். இதையடுத்து காசோலையில் குறிப்பிட்ட தகவலின்படி பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் காசோலைதான் அது என்பது என தெரிய வந்தது. மேலும் அந்த காசோலை எம்விபி டபுள் ரோடு கோடாக் வங்கிக் கிளையின் பெயரிலும் இருந்தது.

இதையடுத்து வங்கிக்கு சென்ற அதிகாரிகள் அந்த காசோலை குறித்த தகவல்களை கேட்டனர். அப்போது பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்குதான் அது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்கில் 17 ரூபாய் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் அதிகாரிகள் அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

திருப்பதி செல்லும் பக்கதர்களுக்கு இனி அந்த கவலை வேண்டாம்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், மோசடியாக காசோலையை போட்டு சாமிக்கே அந்த நபர் விபூதி அடிக்க பார்த்துள்ளதாக கூறி வருகின்றனர். இதுபோன்று மோசடி வேலையில் ஈடுபட்டு மற்றவர்களின் நேரத்தை வீணடித்த அந்த நபர் மீது போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.