உ.பி: மருமகளுக்காக கணவனைக் கொன்ற மனைவி… விசாரணையில் வெளியான `அதிர்ச்சி' தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம், படவுன் பகுதியில் வசித்தவர் தேஜேந்தர் சிங் (43). இவரின் மனைவி மிதிலேஷ் தேவி (40). கடந்த 14-ம் தேதி தேஜேந்திர் சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் அதிகாரமான தகவல் கிடைத்தது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தேஜேந்தருடன் குடும்பம் நடத்தி வந்த அவரின் மனைவியே, அவரைக் கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மிதிலேஷ் தேவியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை

ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இறுதியில், குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், “எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்குத் திருமணம் செய்து வைத்தோம். என்னுடைய மருமகளுக்கு 19 வயதுதான் ஆகிறது. இதற்கிடையில், என் கணவர் மருமகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். இதை ஆரம்பத்தில் தடுத்து அறிவுரைக் கூறினேன். ஆனால் அவர் என்னை அடிக்கத் தொடங்கினார். மருமகளை அவரது படுக்கை அறைக்கு அனுப்பும்படி தினமும் கட்டாயப்படுத்தி அடிப்பார்.

இதனால், எனது மருமகளைக் காப்பாற்ற வேண்டும் என நிலைத்து அவர் தூங்கும்போது, கழுத்தை அறுத்து என்னுடைய கணவரைக் கொலைசெய்தேன்” எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய போலீஸார், “மிதிலேஷ் தேவிக்கு தன்னுடைய கணவனுக்கும் மருமகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்திருக்கிறது அதன் காரணமாக கொலை செய்திருக்கலாம். வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.