புதுக்கோட்டையில் 3-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு!

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமசந்திரன் வீடு, அலுவலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முத்துபட்டினத்தில் உள்ள அவரின் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஆடிட்டர் முருகேசன், அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டிலும் சோதனை தொடர்ந்து வருகிறது.