அமைச்சர் செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு தள்ளுபடி; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி

இந்த மனு கடந்த வாரம், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, `செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ, `சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளது. விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜியிடம் ஏன் பா.ஜ.க-வில் சேரக்கூடாது எனக் கேட்கப்பட்டது. அதோடு, அ.தி.மு.க-வில் இருந்த போது நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில், தி.மு.கவில் சேர்ந்த பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

ஆனால், செந்தில் பாலாஜியின் தரப்பு குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத்துறை தரப்பு, `போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சமாகப் பெற்ற பணம் வங்கி பரிவர்த்தனை மூலமாக நடந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி ரொக்கமாகக் கூட பெற்றிருக்கலாம். செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி முடித்தாலும் கூட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. வேறு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

நீதிபதி அல்லி – அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் கலைக்கப்படக்கூடும். மேலும், தற்போதும் அவர் அமைச்சராக செல்வாக்கு மிக்க நபராக உள்ளதால் விசாரணை பாதிக்கப்படும், எனவே ஜாமீன் வழங்க கூடாது. மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்கிட முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி அல்லி, தீர்ப்பை செப்டம்பர் 20-ம் தேதி தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை நிராகரித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.