டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டம் மொகாடாவில் உள்ள கபல்பாடாவில் உள்ள ஆசிரம பள்ளியில் படித்து வந்தவர் அர்ச்சனா(18). இவர் விடுதியில் தங்கிக்கொண்டு அருகில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். இவரை கடந்த சில நாள்களாக பிரபாகர்(22) என்ற வாலிபர் பின் தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். அவர் தனது பெற்றோர் மூலம் அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.
அர்ச்சனா தான் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனாலும் அர்ச்சனாவை பிரபாகர் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தார். அர்ச்சனா நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு தனது தோழிகளுடன் விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அந்நேரம் பிரபாகர் பின்புறமாக வந்து `கத்தியால் அர்ச்சனாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே அர்ச்சனாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அதற்குள் அர்ச்சனா இறந்து போனார். அர்ச்சனாவை கொலை செய்த பிரபாகர் அங்கிருந்த காட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரபாகரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் மொகாடாவில் உள்ள ஏரியில் பிரபாகர் பிணமாக மிதந்தார். அவர் அங்கிருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். விபத்து மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.