டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார், 2033 அக்டோபர் வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உயர்ரக இரண்டு சக்கர வாகனங்களை சாலையில் அதிவேகமாக இயக்குவதும் சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இணையதளத்தில் பிரபலமானவர் டிடிஎப் வாசன். விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை ஒட்டியதாக ஏற்கனவே பல்வேறு சம்பவங்களில் இவர் மீது கோவை, நீலகிரி, கடலூர், சென்னை மற்றும் மணாலி […]
