சந்தானம் நடிக்கும் புதிய படம்

'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாலயா அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.