சென்னை வேளச்சேரி சசிநகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் பரசுராமன் (48). இவர் கடந்த 30.1.2018-ம் தேதி மேற்கு மாம்பலம் மாணிக்கம் தெருவில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெமினி என்கிற முகமது ஆசிம் (26) என்பவர் பரசுராமனிடம் மது அருந்த பணம் கேட்டிருக்கிறார். பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த முகமது ஆசிம், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரசுராமனை குத்தினார். இதில் அவர் உயிரிழந்ததையடுத்து அசோக்நகர் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிமை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அசோக்நகர் போலீஸார், நீதிமன்றத்தில் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தினர். இருதரப்பு விசாரைணையும் முடிவடைந்து கடந்த 20-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் முகமது ஆசிம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த அசோக் நகர் போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.