காசா மீதான இஸ்ரேலின் இரவு நேர தாக்குதல்களில் 80 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தகவல்

காசா: காசா மீது இஸ்ரேல் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹமாஸ் தரப்பில் வெளியிட்ட தகவலில்,”நேற்று ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய காசா – இஸ்ரேல் மோதல் இன்னும் நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.