`சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்' – பாமக கருத்தரங்கில் அசோக் வரதன் ஷெட்டி

`சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில், சென்னை தியாகராய நகரிலுள்ள தியாகராயர் அரங்கில் பா.ம.க சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மாசிலாமணி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் வரதன் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார். 69% இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாகவும், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாகவும் 2011-ம் ஆண்டில், 45 சமூக அமைப்புகளின் தலைவர்களோடு சென்று, அப்போதைய முதல்வரை கருணாநிதியை ராமதாஸ் சந்தித்துப் பேசியிருந்தார். அதை தனது பேச்சின்போது குறிப்பிட்ட அன்புமணி, தற்போதும் அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ராமதாஸ் அவர்கள் சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

“சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு” கருத்தரங்கில் ராமதாஸ் உரை

கருத்தரங்கில் பேசிய அசோக் வரதன் ஷெட்டி, “அரசு செயலாளர் பதவிகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதித்துறை என பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட சாதியினரின் பிரதிநிதித்துவமே மேலோங்கி இருக்கிறது. ஆனால் மக்கள்தொகையில் அவர்களின் எண்ணிக்கை என்ன… பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரின் எண்ணிக்கை என்ன… ஜனநாயகத்தில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் மிக அவசியமான ஒன்று. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதனை அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இலவச சிலிண்டர், மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு நலத்திட்டங்களுக்காக மாநில அரசுகள் பல ஆய்வுகளை நடத்தியிருக்கின்றன.

“சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு” பாமக நடத்திய கருத்தரங்கம்

அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பையும் மாநில அரசே நடத்தலாம். அதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது போன்றதுதான்.

முதல்வர் ஸ்டாலின்

நமது முகம் அழகாக உள்ளதா, இல்லையா என்பது அதில் தெரியும். தேர்வே நடத்தாமல் மதிப்பெண் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. அதுபோல சமூக நோய்களை சீர்திருத்த வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும். இதை சாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்லாமல் social group census (சமூக குழுக்கள் கணக்கெடுப்பு) என்று சொன்னால் மேலும் பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.