விருதுநகர்: விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய இணை பதிவாளர்… கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பறிமுதல்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கடந்த வாரத்தில் வாகன சோதனை சாவடியில் வைத்து பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் நபர், காரில் லஞ்ச பணத்துடன் வீட்டுக்கு செல்லும் வழியில் விஜிலென்ஸ் சோதனையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து போலீஸிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம், விருதுநகர் – மதுரை சாலையில் செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த சுந்தரேஸ்வரன் (வயது 59) என்பவர் இணை பதிவாளர் எண்.1, எனும் நிலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று, இரவு 8.40 மணி அளவில் சுந்தரேஸ்வரன் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். தொடர்ந்து அவர், தன்னுடைய TN 59 BR 4834 என்ற எண் கொண்ட காரில் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார்.

சோதனை

அப்போது, அவரை பின்தொடர்ந்து காரில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன சோதனைச்சாவடி அருகே வைத்து சுந்தரேஸ்வரன் காரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், சுந்தரேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,25,000 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், விருதுநகர் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.