புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசு பணிக்கு தேர்வான 51 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.
நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.