மஹாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை? பிரதமர் மோடிக்கு பூபேஷ் பகேல் கேள்வி

ராய்பூர்,

மஹாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு தற்போது வரை ஏன் தடை செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கார் முதல் மந்திரி பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பியுள்ளார். மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து பூபேஷ் பகேல் ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

அதனையடுத்து துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட செயலி ஊழலுக்கும் சத்தீஷ்கார் மாநில அரசுக்கும் என்ன தொடர்பு என்பதை முதல்-மந்திரி பூபேஷ் பகேல் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பகேல் கூறியதாவது: “சூதாட்ட செயலியை தற்போது வரை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை? அதனை தடை செய்வதற்கும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்குமான பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது. தற்போது வரை ஏன் இதில் தொடர்புடையவர்களை கைது செய்யவில்லை. சூதாட்ட செயலி உரிமையாளர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.