தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது. கடந்த 27-ம் தேதி முதல் முறையாக ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்தது. அதன் பிறகு 200 கோடி ரூபாய் கேட்டு மீண்டும் முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. மூன்றாவதாக ரூ.400 கோடி ரூபாய் கேட்டு மீண்டும் கொலை மிரட்டல் வந்தது. அனைத்து மெயில்களும் சதாப் கான் என்பவர் பெயரில் பெல்ஜியத்தில் இருந்து வந்திருந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சதாப் கான் அனுப்பிய ஐடி உண்மையானதா அல்லது போலியானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கொலை மிரட்டல் விடுத்த நபர் தெலங்கானாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தெலங்கானாவில் இருந்து கைது செய்யப்பட்டார். அவரது பெயர் கணேஷ் ரமேஷ்(19) என்று தெரிய வந்தது. அவரை மும்பை போலீஸார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை கிடையாது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கைது செய்யப்பட்ட நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
கொலை மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து மும்பை போலீஸார் அம்பானி குடும்பத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். அம்பானி தனது பாதுகாப்புக்கு வெளிநாட்டில் இருந்து குண்டு துளைக்காத காரை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.