திருட்டு, மோசடி, ஊழல், முறைகேடுகள் இல்லாத தேசிய கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு

திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தேசிய கிரிக்கெட் வளையாட்டை மீண்டும் கட்டியெழுப்பி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அலி சப்ரி, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகிய நான்கு முக்கிய அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற ரீதியில் செயற்படும் போது அரச தலைமையும் அமைச்சரவையும் சர்வதேச ரீதியில் நாம் கடைப்பிடிக்கும் சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், எனவே ஜனாதிபதி, பொறுப்பான அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான மற்றும் ஆழமான ஆய்வை மேற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் விளக்கினார்.

அமைச்சரவை தீர்மானம் எடுப்பதில் தனிப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக காரணிகள் பரிசீலிக்கப்படுவதாகவும் இது சர்வதேச விடயம் என்பதால் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமக்கு மேலோட்டமான அறிவு மட்டுமே உள்ளது எனவும், எனவே இது தொடர்பில் விரிவாக ஆராய அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.