லண்டனில் படமான 'சில நொடிகளில்'

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களுக்குப் பிறகு ரிஷி ரிச்சர்ட் நடிக்கும் படம் 'சில நொடிகளில்' மலேசியாவில் வசிக்கும் நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா, இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கி உள்ளார். யாஷிகா ஆனந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது.

படம் பற்றி இயக்குனர் வினய் பரத்வாஜ் கூறும்போது “கதை நாயகனான ரிஷி ரிச்சர்ட் லண்டனில் காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறார். அவரது தோழி யாஷிகா ஆனந்த் அளவிற்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டு உயிரிழக்கிறார். இதனால் ரிச்சர்ட்டின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிறது. இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் (கீதா) இருந்து அவர் என்ன ரகசியங்களைப் பெற்றார், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்” என்றார்.

இஷான் ராஜாதிக்ஷா, எல்லே நவ், ஸ்ரீனிவாஸ் காஷ்யப் மற்றும் இயக்குநர் வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்க, மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ மற்றும் ரோஹித் மாட் ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.