Shreyas, Rahul century: India pile up 410 runs | ஸ்ரேயாஸ், ராகுல் சதம்: இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஸ்ரேயாஸ், ராகுல் சதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 410 ரன் குவித்தது.

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய சுப்மன், 30 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது சுப்மன் (51) அவுட்டானார். வான் மீகெரென் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 44 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 61 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த விராத் கோலி தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவர், 51 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லோகேஷ் ராகுல், தன்பங்கிற்கு சதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 208 ரன் சேர்த்த போது ராகுல் (102) அவுட்டானார்.

இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 410 ரன் குவித்தது. ஸ்ரேயாஸ் (128), சூர்யகுமார் யாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நெதர்லாந்து சார்பில் பாஸ் டி லீடு 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி சார்பில் களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரைசதம் கடந்துள்ளனர். உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் முதல் 5 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.