சென்னை: சென்னை, பெங்களூருவில் உள்ள ஜவுளி கடை உரிமையாளர்கள் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்பாக இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இதுபோல் சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை குறித்து முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement