வேலைக்கு நிலம் வழக்கு | லாலு குடும்பத்துக்கு நெருக்கமான அமித் கத்யாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 

புதுடெல்லி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் தொழிலதிபர் அமித் கத்யாலை டிச.5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கின் பணமோசடியில் தொடர்பு இருப்பதாகக் கூறி இம்மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அமித் கத்யால் நவ.22ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக 2023 ஜூலையில் லாலு பிரசாத் யாதவின் முன்னால் சிறப்பு அதிகாரி போலா யாதவ் என்பவரை சிபிஐ கைது செய்தது. அதே போல் மார்ச் மாதத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டதின் கீழ் அமலாக்கத்துறையும் சோதனைகள் நடத்தி கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இதனிடையே, இந்தவழக்கு தொடப்பாக டெல்லி நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மற்றும் பிறருக்கு பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியிருந்தது. மார்ச் மாதத்தில் சிபிஐ லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியிடம் விசாணை நடத்தினர்.

இந்நிலையில் அக்டோபர் மாதம் இவ்வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.