Tata Motors – ஜனவரி 2024ல் டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை உயருகின்றது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் பிரிவில் உள்ள கார் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. விலை எத்தை சதவிகிதம் உயர்த்தப்படும் என உறுதியாக அறிவிக்கவில்லை.

ஏற்கனவே, ஆடி இந்தியா, மாருதி சுசூகி என இரண்டு நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் டாடா மோட்டாரும் இணைந்துள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்த பட்டியலில் இணைய உள்ளது.

Tata Motors Price hike

டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஜனவரியில் எங்களின் பயணிகள் மற்றும் மின்சார வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விலை உயர்வு மற்றும் சரியான விவரங்கள் சில வாரங்களில் அறிவிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.

சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டே விலை உயர்த்தப்படுகின்றது.

ஜனவரி 1, 2024 முதல் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது, இந்நிறுவனம் ரூ.5.60 லட்சத்தில் துவங்குகின்ற டியாகோ முதல் ரூ.25.94 லட்சம் வரையிலான விலை வரை சஃபாரி எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.