ஒரே மாதத்தில் நுணக்குழி படப்பிடிப்பை முடித்த ஜீத்து ஜோசப்

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் ஏன் பாலிவுட்டிலும் கூட தனது திரிஷ்யம் படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதே சமயம் படத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேகமாக முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செயல்படும் ஜீத்து ஜோசப் பெரிய நடிகர், சிறிய நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் படங்களை இயக்கி வருகிறார்ர் அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர் திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் நுணக்குழி என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார் ஜீத்து ஜோசப். படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே இந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் கதாநாயகனாக மின்னல் முரளி பட இயக்குனரும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடித்துள்ளார். ஜீத்து ஜோசப்புடன் இணைந்து ஏற்கனவே டுவல்த் மேன், கூமன் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கே.ஆர் கிருஷ்ணகுமார் இந்த படத்திலும் இணைந்து கதை எழுதி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.