வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: தைவானை சீனாவின் பிரதான நிலப்பரப்புடன் பீஜிங் மீண்டும் இணைக்கும் என ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தைவானை சீனாவின் பிரதான நிலப்பரப்புடன் பீஜிங் மீண்டும் இணைக்கும் என ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜி ஜின்பிங் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு ஆதரவுடன் தைவான் தனது சுதந்திரத்தை அறிவித்தால், சீனா ராணுவ ரீதியாக தாக்கும்.
வெளிநாட்டு சக்திகள் மற்றும் சில பிரிவினைவாதிகளின் தலையீட்டில் மட்டுமே தைவான் செயல்பட்டு வருகிறது. தைவானை சீனா உடன் இணைப்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது என ஜோ பைடன் அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement