சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்சி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
கேலக்சி ஏ15: சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் சூப்பர் AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ ப்ராசஸர்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- யுஎஸ்பி டைப்-சி
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.19,499 முதல் தொடங்குகிறது
- சாம்சங் கேலக்சி ஏ25 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது