அலை ஓசை உள்ள வரை உங்கள் நினைவோசை : விஜயகாந்திற்கு திரையுலகினர் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலியும், வலைதளங்களில் இரங்கலும் பதிவிட்டு அவரின் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்… பிரேமலதா மேடம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பேரன்பும், வலிமையும் கிடைக்கட்டும். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன்.

நடிகர் ஹரிஷ் கல்யாண்
தங்க இதயம் கொண்ட மனிதர்… உங்களை உண்மையாகவே தவறவிட்டுவிட்டேடாம் சார்…

நடிகர் அருள்நிதி
மிகச்சிறந்த மனிதர், ஆழ்ந்த இரங்கல் கேப்டன்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை ! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

நடிகர், இயக்குனர் ஆர்ஜே பாலாஜி
'விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்' – இதைச் சொல்ல நீங்கள் திரையுலகில் இருக்க வேண்டியதில்லை, தமிழ்நாட்டின் சில தொலைதூரப் பகுதியில் நாங்கள் திரைத்துறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இதை நாங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் எப்போதும் அன்பானவர், நல்லவர், தைரியமான மனிதர், தலைவர், சாதனையாளர் என்று நினைவுகூறப்படுவீர்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ்

அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன் . பிரிவால் வருந்துகிறோம் கேப்டன்.

நடிகை துஷாரா விஜயன்
நடிகர் விஜயகாந்த் சார் காலமானார் என்ற செய்தியால் ஆழ்ந்த வருத்தம். அவரது மறக்கமுடியாத நடிப்பு திரையுலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்குச் செல்கின்றன. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

நடிகர் நந்தா
தங்கமான குணம் கொண்டவர், நம்ப முடியாத மனிதர். எங்கள் இதயங்களில் எப்போதும் நாயகனாக இருப்பீர்கள் டியர் விஜயகாந்த் சார்.

இயக்குனர் சிம்புதேவன்
சினிமாவில் பல துறைகளிலும்.. யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குருவாக இருக்கலாம். ஆனால் 'மனிதநேயத்தில்' எல்லோருக்கும் குருவாக இருந்தது நீங்கள் தான் !

நடிகர் ஆர்யா
உண்மையான கேப்டன், உண்மையிலேயே நலம் பெற விரும்பி… அனைவரையும் கவனித்துக்கொள்வார்…உங்களை மிஸ் செய்வோம் சார்…

சூரி
கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை…. ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம்… மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரி வழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்துச்சு! தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும்! கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.