Bus driver Rs. 14 lakh robbery: Two policemen arrested | பஸ் டிரைவரிடம் ரூ. 14 லட்சம் கொள்ளை: இரு போலீசார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இந்தூர்: குஜராத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு தனியார் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ .14 லட்சம் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் இரு போலீசார் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த அங்கித் ஜெயின் என்ற வியாபாரி ரூ. 14 லட்சம் ரொக்கபணம் அடங்கிய பெட்டி ஒன்றை , மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண்ணையாலால் என்பவருக்கு ஆம்னி பேருந்தில் டிரைவரின் பாதுகாப்பில் அனுப்பி வைத்தார்.

கடந்த 23-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வந்த போது பஸ்சில் இருந்த பணப்பெட்டி காணவில்லை. பஸ் டிரைவர் இல்லாத நேரத்தில் ரூ. 14 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கண்ணயா லால் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யோகேஷ் சவுகான், தீபக் யாதவ் என்ற இரு போலீஸ் கான்ஸ்டபிள்கள் என தெரிய வந்தது. இரு போலீசாரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடக்கிறது என கூடுதல் இணை கமிஷனர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.