புதுடில்லி:நகைக் கடை உரிமையாளரிடம் 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்கம் பறிக்க முயன்ற மற்றொறு நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு டில்லி சங்கம் விஹாரில் நகைக்கடை நடத்தும் ஒருவருக்கு, கடந்த 14ம் தேதி இரண்டு வெவ்வேறு மொபைல் போன் எண்களில் இருந்து ஒருவர் பேசினார். பிரபல கொள்ளையன் நீரஜ் பவானா கும்பலைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
புத்தாண்டுக்குள் 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
நகைக்கடை உரிமையாளர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.
மிரட்டல் வந்த இரு மொபைல் போன் எண்களையும் போலீசார் கண்காணிப்பில் கொண்டு வந்தனர்.
தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த விபின் குப்தா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலை மீட்டெடுக்க நண்பருடன் சேர்ந்து மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாக போலீசிடம் விபின் குப்தா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு மொபைல் போன், மூன்று சிம் கார்டுகள் மற்றும் குரல் மாற்றிக் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் டில்லி நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement