மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

நைப்பியிதோ,

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று இரவு 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.