சென்னை தமிழக முதல்வர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களுக்குக் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாதம் தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்தது. தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பிறகு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள், தெருவோர வியாபாரிகளுக்கு […]
