18.72 crore increase in Sabarimala revenue | சபரிமலை வருமானம் ரூ.18.72 கோடி அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை வருமானம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது என்று நேற்று முன்தினம், தெரிவித்திருந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேற்று(டிச.,30) 18.72 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.

குத்தகை ஏலவருமானத்தையும் சேர்த்து இந்த மண்டல காலத்துக்கான மொத்த வருமானம் 241 கோடியே 72 லட்சத்தி 22,711 ரூபாய். இது, கடந்த ஆண்டு 222 கோடியே 98 லட்சத்து 70,250 ரூபாயாக இருந்தது. இதன்படி, 18.72 கோடி அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.