வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 155 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று பிற்பகலில், 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டன. குறைந்தபட்சம் 4 ரிக்டர் அளவுக்கு பதிவானது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. வலிமை படிப்படியாகக் குறைந்தாலும், இன்று(ஜன.,02) ஆறு முறை நடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement