“கருணாநிதியை தவிர எனக்கு வேறெந்த 'நிதி'யும் தெரியாது" – ஆளுநர் இல.கணேசன்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இரண்டு நாள் பயணமாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் இல.கணேசன், சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வெள்ளம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அதிலிருந்து மக்களை மீட்டு கொண்டு வருவதில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள். பத்திரிகைகளில் வந்த செய்தியை கொண்டு ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். நாகாலாந்தில் எந்த பிரச்னை வந்தாலும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அதுபோல், தமிழகத்தில் நடைபெறும் விஷயத்தை மத்திய அரசாங்கத்தின்‌ கவனத்திற்கு கொண்டு செல்வதற்கென்று பொறுப்பாக பலர் இருக்கிறார்கள்” என கூறினார்.

வரவேற்பு

தொடர்ந்து, பொங்கல் பரிசு நிதி குறித்த கேள்விக்கு, ‘எனக்குத் தெரிந்த ஒரே ‘நிதி’ முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான். மற்ற ‘நிதி’ எதுவும் எனக்கு தெரியாது” என பதிலளித்து சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.