சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகம் ரூ.6,64,180 கோடி முதலீடு ஈட்டி உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி உள்ளனர். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. […]
