மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 202 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 120 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஜிமா உள்ளிட்ட கரையோர […]
