Annapoorani Controversy Scenes: FIR Against Actress Nayanthara | அன்னபூரணி பட சர்ச்சை காட்சிகள் : நடிகை நயன்தாரா மீது எப்.ஐ.ஆர்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: அன்னபூரணி பட காட்சி தொடர்பாக நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

நடிகை நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள ‛‛ அன்னபூரணி” என்ற திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து, ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நயன்தாரா சமையல் கலை வல்லுனராக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நடிகர் ஜெய் கூறுவார்.

இந்த காட்சிக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஹிந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலன்கி மும்பை எல்.டி.மார்க் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில் அன்னபூரணி படத்தில் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது. எனவே படத்தின் இயக்குனர் நடிகை நயன்தாரா, ஜெய், இப்படத்தை வெளியிட்ட நெட் பிளிக்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை பதிவு செய்த போலீசார் நடிகை நயன்தாரா உள்ளிட்டேர் மீது எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.