Karthi: அரவிந்த் சாமியுடன் மோதல்; எம்.ஜி.ஆர் ரசிகனாக அலப்பறை – கார்த்தியின் ரகளை லைன் அப்!

இந்த 2024, கார்த்தியின் ஆண்டாக இருக்கும் போலிருக்கிறது. இயக்குநர்கள் நலன் குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கார்த்தி, இப்போது ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புகள் குறித்த அப்டேட்கள் இனி…

கீர்த்தி ஷெட்டி

தன் 25வது படமான ‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு, நலன் குமாரசாமியின் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். சென்னையில் ஒரு ஷெட்யூல் நடந்து முடிந்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ‘ஜப்பான்’ படப்பிடிப்பிற்கு இடையே இதன் படப்பிடிப்பையும் தொடங்கினார் கார்த்தி. இதில் எம்.ஜி.ஆரின் ரசிகராக அவர் நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. படத்தின் தலைப்பு ‘வா வாத்தியாரே’ என்றும் சொல்லி வருகிறார்கள். அதன்பின், இதன் ஒரு ஷெட்யூல் நடந்துமுடிந்த வேகத்தில், ’96’ பட இயக்குநரான பிரேம்குமாரின் படத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ’96’ படத்திற்கு பின், கார்த்தியின் படத்தை பிரேம்குமார் இயக்குவார் என்றனர். கார்த்தியின் கமிட்மென்ட்களால் பிரேம்குமாரின் படம் சில மாதங்களுக்கு முன்னர்தான் தொடங்கியது. கும்பகோணத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தொடர்ந்து காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வந்தது. மெயின் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார் என்றும், இது ஹீரோவுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள கதை என்றும் சொல்கிறார்கள். கதாநாயகி போர்ஷன் பெரிய அளவில் இருக்காது என்பதால், சின்னத்திரை நாயகி ஒருவர்தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.

இதற்கிடையே இந்த மாதக் கடைசியில் நலன் குமாரசாமி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. இப்படி ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார் கார்த்தி.

கார்த்தி

இதனை முடித்து விட்டு, ‘கைதி 2’ அல்லது ‘தீரன் அதிகாரம் இரண்டு’ ஆகியவற்றில் ஒன்றைத் தொடங்கலாம் என்ற பேச்சு உள்ளது.

பிரேம்குமார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த கார்த்தி, குடும்பத்தினருடன் ரிலாக்ஸ் ட்ரிப்பாக ஆஸ்திரேலியா பறந்தார். அங்கிருந்து சென்ற மாதக் கடைசியிலேயே அவர் சென்னை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் தாமதமாகத்தான் சென்னை வந்தார். பிப்ரவரி முதல் வாரத்தில் நலன்குமாரசாமியின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.