கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை […]
