புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும்படியாகும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், 370 வது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பான கலந்துரையாடல், சென்னை தி.நகரில் நடந்தது. இந்த கலந்துரையாடலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன், எழுத்தாளரும் கட்டுரையாளருமான கேஎஸ் ராதாகிருஷ்ணன், பேச்சாளர் தமிழருவி மணியன் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, வழக்கறிஞர் ஷெல்வி கே. தாமோதர் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.
மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசும்போது, பயங்கரவாதத்தின் நுழைவாயிலை சுற்றுலாவின் சொர்க்கபூமி ஆக்கியவர் பிரதமர் மோடி என கூறியுள்ளார். இது குறித்த சிறப்பு தொகுப்பு தினமலர் யூடியூப் பக்கத்தில் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
அதனைக் காண:
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement