24 crore people have been lifted out of poverty: NITI Aayog | வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் 24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ‛நிடிஆயோக்’ நிறுவனம் , நாட்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் 24.08 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

இதில் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியால் கடந்த 2013-14-ம் ஆண்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் 29.17 சதவீதம் இருந்தது, கடந்த 2022-23-ம் ஆண்டில் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது. உத்திரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.