
கங்குவா படத்துக்குப் பிறகு மூன்று படங்களில் நடிக்கும் சூர்யா
சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சுதா கெங்கரா இயக்கும் தனது 43 வது படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் மகாபாரத படத்தில் நடிக்கப் போகிறார். கர்ணன் வேடத்தில் சூர்யா நடிக்கும் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. வருகிற ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மக்கள் ஜான்வி கபூர் நாயகியாக கமிட்டாகியுள்ளார்.