Tamil News Live Today: குஜராத்: ஏரியில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 12 பேர், ஆசிரியர்கள் இருவர் உயிரிழப்பு

ஏரியில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 12 பேர், ஆசிரியர்கள் இருவர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 12 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதம்பாக்கத்தில் ரயில் பாலம் இடிந்து விபத்து!

சென்னை, ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில், பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பறக்கும் ரயில் பணிக்குப் பாலம் அமைக்கும்போது, இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விழுந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மசூதியை இடித்து கோயில் கட்டியதில், எங்களுக்கு உடன்பாடில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு நோக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராமர் கோவில் திறப்பு, மத நம்பிக்கை ஆகியவற்றில் திமுகவுக்கு எதிர்ப்பு இல்லை. மசூதியை இடித்து கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை” என்றார்,.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.