புதுடில்லி : ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்துள்ளன.
புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும், இன்று அரை நாள் விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதே நேரத்தில் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் செயல்படும் என, அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அரை நாள் விடுமுறை அறிவிப்பை, எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று திரும்பப் பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement