அடுத்த வருடம் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் – கல்வி அமைச்சர்

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தி இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாட்களில் நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.