புதுடில்லி: நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த உள்ளது. மார்ச் மாதம் 3-ம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement